வெற்றிக் கோப்பை சின்னம் கேட்டு தமிழக வெற்றிக் கழகம் மனு

0
16

ஆட்டோ, கிரிக்கெட் பேட், விசில், வெற்றிக் கோப்பை உள்ளிட்ட சின்னங்​களில் ஒரு சின்னத்தை ஒதுக்​குமாறு தேர்தல் ஆணையத்தில் தவெக நிர்வாகிகள் மனு அளித்​துள்​ளனர்.

தமிழக சட்டப்​பேரவை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருப்​ப​தால், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகி​றார். சமீபத்தில் நடைபெற்ற தவெக பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் எனவும், கூட்டணி குறித்து முடிவை கட்சியின் தலைவர் விஜய் எடுப்பார் என்றும் தீர்மானம் நிறைவேற்​றப்​பட்டது. கரூர் சம்பவத்​துக்கு பிறகு அதிமுக – பாஜக கூட்ட​ணியில் விஜய் இணைய வாய்ப்​புள்ளதாக அரசியல் விமர்​சகர்கள் பலர் தெரிவித்து வந்த நிலையில், தவெகவின் பொதுக்குழு தீர்மானம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்​தி​யுள்ளது.

இதற்கிடை​யில், மீண்டும் விஜய் சுற்றுப்​பயணம் மேற்கொண்டு மக்களை சந்திப்​ப​தற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதற்காக, கட்சியில் பல்வேறு மாற்றங்களை விஜய் செய்து வருகி​றார். இந்நிலை​யில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்​பேரவை தேர்தலில் போட்டி​யிட​வுள்ள தவெக கட்சிக்கு சின்னம் ஒதுக்​கக்​கோரி, அக்கட்​சியின் நிர்வாகிகள் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் நேற்று மனு அளித்​தனர். தவெக கொடுத்​துள்ள பொதுவான 10 சின்னங்கள் அடங்கிய பட்டியலில் ஆட்டோ, கிரிக்கெட் பேட், விசில் சின்னம் இடம் பெற்றுள்ளது.

இதுதொடர்பாக தவெக நிர்வாகி​களிடம் கேட்ட போது, “வேட்​டைக்​காரன் படத்தில் விஜய் ஆட்டோ ஓட்டு​வார். பைரவா படத்தில் விஜய் கிரிக்கெட் விளையாடு​வார். பிகில் படத்தில் விஜய் கபடி பயிற்​சி​யாளராக விசிலுடன் இருப்​பார். அதேபோல் பிகில் படத்தில் ‘கப் முக்கியம்’ என்று விஜய் சொல்வார். அதனால், வெற்றிக்​கோப்பை சின்னமும் கேட்டுள்​ளோம். இந்த நான்கு சின்னமும் விஜய்க்கு மிகவும் பிடித்த சின்னமாக உள்ளது. இதில், ஏதாவது ஒரு சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்​கி​னால், சின்னத்தை எளிதாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்” என்றனர்.

மக்கள் நீதி மய்யம்: இதற்கிடையே, பொது சின்னம் ஒதுக்​கக்கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தல் ஆணையத்​திடம் விண்ணப்​பித்​துள்ளது.
2026 தமிழக சட்டப்​பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்​களுக்காக விருப்​பப்பட்ட 10 சின்னங்​களின் பட்டியலில் இருந்து ஒரு பொதுச்​சின்​னத்தை ஒதுக்​குமாறு இந்திய தேர்தல் ஆணையத்​திடம் மக்கள் நீதி மய்யம் சார்பில் நேற்று விண்ணப்​பிக்​கப்​பட்​டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரதி​நி​திகள் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலு​வல​கத்தில் ஆணைய அதி​காரி​களைச் சந்​தித்து, விண்​ணப்​பத்தை அளித்​தனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here