தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் இன்று காலை 6.30 மணியளவில் சரக்கு லாரி மற்றும் கனிமவள டாரஸ் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று இரவு இதே பகுதியில் வேன் மற்றும் பைக் மோதியதில் இருவர் காயமடைந்தனர். இதனால், இப்பகுதியில் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
            













