வலிமையான தலைவர் பிரதமர் நரேந்திர மோடி: தென்கொரியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு

0
18

பிரதமர் மோடி வலிமை​யான தலை​வர், அவரை எனக்கு பிடிக்​கும். தாமத​மாகி கொண்​டிருக்​கும் வர்த்தக ஒப்​பந்​தத்​தில் இந்​தி​யா​வும், அமெரிக்கா​வும் கையெழுத்​திடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி​யுள்​ளார்.

இந்​தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்​பந்​தம் ஏற்​படு​வ​தில் நீண்ட தாமதம் ஏற்​பட்டு வரு​கிறது. ரஷ்​யா​விடம் இந்​தியா கச்சா எண்​ணெய் வாங்​கிய​தால், அமெரிக்கா 50 சதவீத வரி விதித்​தது. அமெரிக்​கா​விடம் இருந்து சோளம் மற்​றும் சோயாபீன்ஸ் ஆகிய​வற்றை இறக்​குமதி செய்ய வேண்​டும் என அமெரிக்கா வலி​யுறுத்தி வரு​கிறது. ஆனால், இந்​திய விவ​சா​யிகளின் வாழ்​வா​தா​ரம் பாதிக்​கும் வகை​யில் எந்த ஒப்​பந்​தத்​தை​யும் ஏற்​க​மாட்​டோம் என இந்​திய அரசு கூறிவரு​கிறது. இதன் காரண​மாக இந்​தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்​பந்​தம் ஏற்​படு​வ​தில் தாமத​மாகி வரு​கிறது.

பிரதமர் நரேந்திர மோடி​யும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்​பும் கடந்த வாரம் தொலைபேசியில் பேசினர். ரஷ்​யா​வின் எண்​ணெய் இறக்​கும​தியை குறைக்க இந்​தியா ஒப்​புக்​கொண்ட பிறகு, இறக்​குமதி வரியை 16 சதவீத​மாக குறைக்க அமெரிக்கா ஒப்​புக் கொண்​ட​தாக தகவல்​கள் தெரிவிக்​கின்​றன.

இந்​நிலை​யில் ஆசிய நாடு​களில் சுற்​றுப் பயணம் மேற்​கொண்​டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தென்கொரியா சென்​றுள்​ளார். அங்கு ஆசியா பசிபிக் ஒத்​துழைப்பு அமைப்​பின் தலை​வர்​களிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசி​ய​தாவது:

பிரதமர் மோடி மிக​வும் சிறந்த நபர். அவர் வலிமை​யானவர். அவரை சம்​ம​திக்க வைப்​பது சிரமம். ஆனால், நாங்​கள் போராடு​வோம் என்​றார். இந்​தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாவ​தில் நீண்ட தாமதம் ஏற்​பட்​டுள்​ளது. இதில் இரு நாடு​களும் கையெழுத்​திடும்.

போரை நிறுத்தினேன்: இந்​தி​யா, பாகிஸ்​தான் ஆகிய இரு நாடு​களு​ட​னும் நாங்​கள் வர்த்தக பேச்​சு​வார்த்தை நடத்​துகிறோம். இரு நாடு​களும் போரிட்​ட​போது, நான் பிரதமர் மோடி​யிடம், ‘‘நீங்​கள் சண்​டை​யிட்டு கொண்​டிருந்​தால், உங்​களு​டன் வர்த்தக ஒப்​பந்​தம் செய்ய முடி​யாது என கூறினேன். பின்​னர் பாகிஸ்​தான் பிரதமரை அழைத்​தும் இதையே கூறினேன். 250 சதவீதம் வரி​வி​திப்​பேன் என நான் அச்​சுறுத்​தி​யபிறகு 48 மணி நேரத்​துக்​குள் இரு நாடு​களும் சண்டை நிறுத்​தத்​துக்கு ஒப்​புக் கொண்​டன. இந்த சண்​டை​யில் 7 போர் விமானங்​கள் சுட்டு வீழ்த்​தப்​பட்​டன. எனது தலை​யீடு காரண​மாக கோடிக்​கணக்​கானோர் உயிர் தப்​பினர். இவ்​வாறு அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறி​னார்.

இந்​தியா – பாகிஸ்​தான் போரை நிறுத்​தினேன் என கடந்த மே மாதம் முதல் அதிபர் ட்ரம்ப் கூறிவரு​கிறார். ஆனால் இதில் அமெரிக்​கா​வின் தலை​யீடு எது​வும் இல்லை என இந்​தியா தொடர்ந்து கூறிவரு​கிறது. பாகிஸ்​தான் ராணுவ அதி​காரி விடுத்த வேண்​டு​கோளை அடுத்து சண்டை நிறுத்​தம்​ முடிவு எடுக்​கப்​பட்​ட​தாக
இந்​தி​யா கூறிவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here