தேங்காப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த ராயப்பன் (60) மற்றும் செல்வராஜ் (65) ஆகியோர் நேற்று வழுதூர் வடக்கு சாலை பகுதியில் நடந்து சென்றபோது, அதிவேகமாக வந்த கார் மோதி படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். புதுக்கடை போலீசார், கீழ்குளம் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














