தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் வந்து, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். நாகர்கோவிலில் நடைபெற்று வரும் ரயில்வே திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.














