மைசூரு தசரா விழாவை பானு முஸ்தாக் தொடங்கி வைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி

0
13

கன்னட எழுத்​தாள​ரும் வழக்​கறிஞரு​மான பானு முஸ்​தாக்​கின் ‘ஹார்ட் லாம்ப்’ நூலுக்கு அண்​மை​யில் சர்​வ​தேச புக்​கர் பரிசு கிடைத்​தது. இந்த விருதை வென்ற முதல் கன்னட எழுத்​தாளர் என்​ப​தால், இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவை தொடங்கி வைக்க பானு முஸ்​தாக்​கிற்கு கர்​நாடக அரசு அழைப்பு விடுத்​தது.

முஸ்​லிம் மதத்​தைச் சேர்ந்த பானு முஸ்​தாக் இந்​துக்​களின் தசரா விழாவை தொடங்கி வைக்க எதிப்பு தெரிவித்து மைசூரு​வின் முன்​னாள் எம்​.பி. பிர​தாப் சிம்​ஹா உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார். இந்த மனுவை தலைமை நீதிபதி விபு பக்​ரூ, நீதிபதி சி.எம்​.ஜோஷி ஆகியோர் அடங்​கிய அமர்வு விசா​ரித்​து நேற்று அளித்த தீர்ப்பில், ‘‘அரசி​யலமைப்பு சட்​டம் வழங்​கி​யுள்ள உரிமை​யின்​படி, அரசின் நிகழ்ச்சி நிரலை பிறர் தீர்​மானிக்க முடி​யாது.

ஒவ்​வொரு இந்​திய குடிமக​னுக்​கும் அரசின் நிகழ்​வில் பங்​கேற்​கும் உரிமை உள்​ளது. பானு முஸ்​தாக் நிகழ்ச்​சியை தொடங்கி வைத்​தால் இந்​துக்​களின் மனம் புண்​படும் என்​பதை ஏற்க முடி​யாது. எனவே மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது” என்று தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here