விமானத்தில் திடீர் கோளாறு: 200 ஏர் இந்தியா பயணிகள் 6 மணி நேரம் பரிதவிப்பு

0
22

ஏர் இந்​தியா நிறு​வனத்​தின் பயணி​கள் விமானம் டெல்லி விமான நிலை​யத்​தில் இருந்து நேற்று காலை 11 மணிக்கு சிங்​கப்​பூருக்கு புறப்பட தயா​ராக இருந்​தது. ஆனால் கடைசி நேரத்​தில் விமானத்​தில் தொழில்​நுட்ப கோளாறு கண்​டறியப்​பட்​டது.

இதன்​ காரண​மாக விமானத்​தில் இருந்த 200 பயணி​கள் சுமார் 2 மணி நேரம் விமானத்​திலேயே இருந்​தனர். இதன்​பிறகு அனை​வரும் விமான நிலை​யத்​துக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டனர். பின்​னர் நேற்று மாலை 5 மணி அளவில் மாற்று விமானம் மூலம் 200 பயணி​களும் சிங்​கப்​பூருக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர். ஏர் இந்​தியா விமானத்​தின் தொழில்​நுட்ப கோளாறு காரண​மாக சுமார் 6 மணி நேரம் பயணி​கள் காத்​திருக்​கும் சூழல் ஏற்​பட்​டது.

இதுகுறித்து பயணி​கள் கூறும்​போது, “வி​மான நிறு​வனம் எங்​களிடம் எந்​த​வித தகவலை​யும் தெரிவிக்​க​வில்​லை. விமானத்​தில் 2 மணி நேரம், விமான நிலை​யத்​தில் 4 மணி நேரம் பரித​வித்​தோம்” என்று தெரி​வித்​தனர்.

ஏர் இந்​தியா நிறுவன வட்​டாரங்​கள் கூறும்​போது, “கடந்த ஜூன் 12-ம் தேதி குஜ​ராத்​தின் அகம​தா​பாத்​தில் எங்​கள் நிறு​வனத்​தின் பயணி​கள் விமானம் விபத்​தில் சிக்​கியது. எனவே சிறிய கோளாறு என்​றாலும் மிகுந்த எச்​சரிக்​கை​யுடன் செயல்​படு​கிறோம்.

சிங்​கப்​பூர் செல்ல வேண்​டிய விமானத்​தில் திடீரென தொழில்​நுட்ப கோளாறு ஏற்​பட்​டது. அதை உடனடி​யாக சரி செய்ய முடியவில்லை. எனவே மாற்று வி​மானத்​தில் பயணி​களை சிங்​கப்​பூருக்கு அனுப்பி வைத்​தோம்” என்​று தெரி​வித்​தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here