ஆறுல ஒண்ணு எங்களுக்கு..! – திமுகவுடன் மல்லுக்கட்டத் தயாராகும் புதுக்கோட்டை தோழர்கள்

0
22

“திமுக-விடம் இம்முறை கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம்” என்கிறார் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம். அதேசமயம், மீண்டும் கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதியைக் கேட்டுப் பெற அதிக முனைப்புக் காட்டி வருகிறது சிபிஎம். அதேபோல், தங்களுக்குச் சாதகமான புதுக்கோட்டை அல்லது ஆலங்குடி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதில் அழுத்தமாக இருக்கிறது சிபிஐ. இதில் சிக்கல் என்னவென்றால் ஆலங்குடி அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனின் தொகுதி.

புதுக்​கோட்டை மாவட்​டத்​தில் உள்ள 6 தொகு​தி​களிலும் இடது​சாரி சிந்​தனை​யாளர்​கள் விரவி இருக்​கி​றார்​கள். இங்​குள்ள புதுக்​கோட்​டை, ஆலங்​குடி தொகு​தி​களை ஏற்​கெனவே சிபிஐ வென்​றுள்​ளது. அதே​போல், கடந்த தேர்​தலில் கந்​தவர்​வக்​கோட்​டையை சிபிஎம் கைப்​பற்றி உள்​ளது. சொல்​லப்​போ​னால், கடந்த முறை கந்​தவக்​கோட்​டையை சிபிஎம் கேட்​கவே இல்​லை. கடைசி நேரத்​தில் தான் இந்​தத் தொகு​தியை சிபிஎம்​-​முக்கு டிக் அடித்​தது திமுக. இதையடுத்​து, முன்பு மக்​கள் நலக் கூட்​ட​ணி​யில் இங்கு போட்​டி​யிட்ட சின்​னதுரையையே வேட்​பாள​ராக நிறுத்​தி​யது சிபிஎம். அவரை ஜெயிக்க வைத்​தது திமுக.

கடந்த நான்கு ஆண்​டு​களில் கந்​தர்​வக்​கோட்டை தொகு​திக்கு மேம்​பாலம், சாலை வசதி​கள், புதிய கட்​டிடங்​கள், ஐடிஐ உள்​ளிட்ட அடிப்​படை வசதி​களை நிறை​வேற்​றித் தந்​திருக்​கிறது திமுக அரசு. கடல் பாசி பூங்​கா, சிப்​காட், அரசு மருத்​து​வ​மனை மேம்​பாடு, புறவழிச்​சாலை திட்​டம் போன்​றவை அறி​விப்பு நிலை​யில் உள்​ளது.

இந்​தத் தொகு​திக்​காக இத்​தனை திட்​டங்​களை தந்​திருக்​கும் நிலை​யில், இம்​முறை நாமே இங்கு போட்​டி​யிட்​டால் என்ன என்ற ஆர்​வம் திமுக-வுக்கு இருக்​கிறது. ஆனால், இத்​தனை​யும் கொண்டு வந்​தது நாங்​கள் தானே என்று சொல்லி மறு​படி​யும் இங்கு களமிறங்க நினைக்​கி​றார் சிபிஎம் சின்​னதுரை. கடந்த 4 ஆண்​டு​களில் கந்​தர்​வக்​கோடைக்கு செய்து கொடுத்​திருக்​கும் திட்​டங்​களை பட்​டியல் எடுத்​து​வ​ரும் சின்​னதுரை, “மீண்​டும் இந்​தத் தொகு​தியை எங்​களுக்​குக் கேட்​போம்” என்​கி​றார்.

இதற்​கிடை​யில், புதுக்​கோட்டை வடக்கு மாவட்ட திமுக செய​லா​ளர் கே.கே.செல்​ல​பாண்​டிய​னும் இந்​தத் தொகு​தி​யில் உதயசூரியனை உதிக்க வைக்க அதிக ஆர்​வ​மாக இருக்​கி​றார். இதைத் தெரிந்து கொண்​டு, திமுக பெருந்​தலை​கள், கல்​யாணம், காதுகுத்​து, பூப்​புனித நீராட்டு விழா என மக்​களுக்கு நெருக்​க​மாகி வரு​கி​றார்​கள். அதேசம​யம், “எனது தொகு​திக்கு ஒரு புதிய பேருந்து கூட விட​வில்​லை” என்று சொல்லி புதுக்​கோட்​டை​யில் அண்​மை​யில் அமைச்​சர்​கள் எஸ்​.ரகுப​தி, சிவ.வீ.மெய்​ய​நாதன் கலந்​து​கொண்ட புதிய பேருந்​துகள் இயக்​கம் தொடக்க விழாவை புறக்​கணித்​தார் சின்​னதுரை எம்​எல்ஏ.

இந்த முறை​யும் கந்​தர்​வக்​கோட்டை சிபிஎம் கட்​சிக்​குத்​தானா என புதுகை வடக்கு மாவட்ட திமுக செய​லா​ளர் கே.கே.செல்​ல​பாண்​டிய​னிடம் கேட்​டோம். “தி​முக ஆட்​சி​யில்​தான் கந்​தர்​வக்​கோட்​டைக்கு நிறைய திட்​டங்​கள் கொண்டு வரப்​பட்​டுள்​ளன. இங்கு யார் போட்​டி​யிட்​டாலும் வெற்றி பெறலாம் என்ற அளவுக்கு திட்​டங்​களை தன்​னிறை​வாக்கி உள்​ளோம். அதேசம​யம், திமுக கூட்​ட​ணி​யில் யாருக்கு சீட் என்​ப​தெல்​லாம் கட்​சித் தலை​மை​தான் முடிவு செய்​யும்” என்​றார் அவர்.

இதே​போல, ஆலங்​குடி தொகு​தி​யில் 2006-லும் புதுக்​கோட்​டை​யில் 2011-லும் சிபிஐ வெற்​றி​பெற்​றுள்​ளது. அந்​தக் கணக்கை வைத்து இரண்​டில் ஒரு தொகு​தியை இம்​முறை திமுக-​விடம் கேட்​டுப் பெற சிபிஐ-​யும் தீவிரம் காட்டி வரு​கிறது. ஆனால், ஆலங்​குடி தொகுதி இப்​போது அமைச்​சர் சிவ.வீ.மெய்​ய​நாதன் வசம் உள்​ளது. அதனால் அமைச்​சர் தொகு​தியை கூட்​ட​ணிக் கட்​சிக்கு கொடுக்​குமா திமுக என்​பதை திட்​ட​மாகச் சொல்​வதற்​கில்​லை.

இரண்​டில் ஒன்று என்ற கட்​டாயக் கணக்கு வந்​தால் தற்​போது தங்​கள் வசம் உள்ள புதுக்​கோட்டை தொகு​தியை சிபிஐ-க்கு திமுக விட்​டுத்தர முன்​வரலாம். அதேசம​யம், கடந்த முறை திரு​ம​யம் தொகு​தி​யில் சுமார் 1,300 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​திலேயே வென்று வந்த அமைச்​சர் ரகுப​தி, இம்​முறை ரிஸ்க் எடுக்​காமல் புதுக்​கோட்​டைக்கு மாறி​விடலாமா என்ற யோசனை​யிலும் இருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள்.

அப்​படி அவர் தொகுதி மாறி​னால் புதுக்​கோட்​டை​யும் தோழர்​களுக்கு சாத்​தி​ய​மா​காது. அதே​போல், மாநிலங்​களவை உறுப்​பின​ராக இருந்த எம்​.எம்​.அப்​துல்​லா​வுக்கு மீண்​டும் வாய்ப்​பளிக்​கப்​ப​டாத​தால் அவரும் இம்​முறை புதுக்​கோட்​டைக்​காக மோதலாம் என்​கி​றார்​கள்.

இதுகுறித்து புதுகை மாவட்ட சிபிஐ செய​லா​ளர் த.செங்​கோடனிடம் கேட்​டதற்​கு, “புதுக்​கோட்டை தொகு​திக்​காக திமுக-​வில் பல முக்​கிய தலை​கள் மோதும் போது பிரச்​சினையை சமாளிக்க தொகு​தியை திமுக எங்​களிடம் கொடுத்​து​விட வாய்ப்​பிருக்​கிறது. புதுக்​கோட்டை இல்​லாத​பட்​சத்​தில் ஆலங்​குடியைக் கேட்​டுப் பெற எங்​கள் தலை​மையை வலி​யுறுத்​து​வோம். புதுக்​கோட்டை மாவட்​டத்​தில் கட்​டா​யம் ஒரு தொகு​தியை கேட்​டுப் பெற வேண்​டும் என்​ப​தில் தோழர்​கள் நாங்​கள் உறு​தி​யாக இருக்​கிறோம்” என்​றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here