கட்சியினருடன் செங்கோட்டையன் ஆலோசனை: செப். 5-ம் தேதி ‘மனம் திறந்து’ பேச உள்ளதாக அறிவிப்பு

0
46

கோபி​யில் கட்​சி​யினருடன் நேற்று ஆலோ​சனை நடத்​திய அதி​முக மூத்த தலை​வர் செங்​கோட்​டையன், வரும் 5-ம் தேதி மனம் திறந்து பேசுவ​தாக அறி​வித்​துள்​ளது அதி​முக வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்​பட்​டுள்​ளது.

அத்​திக்​கட​வு-அ​வி​நாசி திட்ட கூட்டமைப்பு சார்​பில் கடந்த பிப்​ர​வரி மாதம் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிக்கு அன்​னூரில் நடந்த பாராட்டு விழா​வில் எம்​ஜிஆர், ஜெயலலிதா படங்​கள் இடம்​பெறாததைக் கண்​டித்​து, முன்​னாள் அமைச்​சரும், கோபி தொகுதி எம்​எல்​ஏவு​மான கே.ஏ.செங்​கோட்​டையன் விழாவைப் புறக்​கணித்​தார்.

தொடர்ந்​து, பழனி​சாமி​யின் பெயரை தவிர்த்து செங்​கோட்​டையன் பேசி​யது, அவரது அதிருப்​தியை வெளிப்​படுத்​தி​யது. எனினும், அவரை சமா​தானப்​படுத்த கட்​சித் தலைமை எவ்​வித நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை.

இந்​நிலை​யில், கோபி​யில் உள்ள தனது வீட்​டில் நேற்று காலை செய்​தி​யாளர்​களைச் சந்​தித்த செங்​கோட்​டையன், “கோபி​யில் வரும் 5-ம் தேதி காலை செய்​தி​யாளர்களை சந்​தித்து மனம் திறந்து பேச உள்​ளேன். அது​வரை பொறுமை காக்க வேண்​டும்” என்​றார்.

தொடர்ந்​து, கோபி​யில் உள்ள கட்சி அலு​வல​கத்​தில் நிர்​வாகி​களு​டன் 3 மணி நேரத்​துக்​கும் மேலாக அவர் ஆலோ​சனை​யில் ஈடு​பட்​டார். இதில் பவானி​சாகர் எம்​எல்ஏ பண்​ணாரி மற்​றும் ஒன்​றிய, நகர, பேரூ​ராட்சி செய​லா​ளர்​கள் உட்பட 100-க்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்​றனர்.

ஆலோ​சனைக் கூட்​டம் முடிந்து வெளியே வந்த செங்​கோட்​டையனிடம், “சசிகலா, ஓபிஎஸ், டிடிவி.தினகரன் இணைப்பு குறித்து வலி​யுறுத்​து​வீர்​களா” என செய்​தி​யாளர்​கள் கேட்​ட​போது, “உங்​களின் அனைத்து கேள்வி​களுக்​கும் 5-ம் தேதி விடை அளிக்​கப்​படும்” என்​றார். கூட்​டத்​தில் பங்​கேற்ற அதி​முக நிர்​வாகி​கள், செங்​கோட்​டையன் எடுக்​கும் முடிவுக்கு கட்​டுப்​படு​வோம் என்​றனர்.

பரவும் வதந்​தி​கள்: செங்​கோட்​டையனுக்​கும் அதி​முக தலை​மைக்​கும் இடையே ஏற்​பட்​டுள்ள முரண்​பாட்​டுக்கு முற்​றுப்​புள்ளி வைக்​காத​தால், கடந்த 6 மாதங்​களாக பல்​வேறு வதந்​தி​கள் சமூக ஊடகங்​களில் பரவி வரு​கின்​றன. இதில், செங்​கோட்​டையன் அதி​முக​வில் இருந்து வில​கி, திமுக​வில் இணைய உள்​ளார் என்ற வதந்​தி​யும் ஒன்​றாகும். இந்​நிலை​யில், வரும் 5-ம் தேதி மனம் திறந்து பேச உள்​ள​தாக செங்​கோட்​டையன் அறி​வித்​துள்​ளது அதி​முக வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்​படுத்​தியுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here