நடிகர் சத்யராஜுக்கு ‘பெரியார் ஒளி’ விருது: விசிக தலைவர் திருமாவளவன் வழங்கினார்

0
191

சென்னையில் நேற்று நடை​பெற்ற விசிக​வின் விருதுகள் வழங்​கும் விழா​வில், முன்​னாள் துணைவேந்​தர் கே.எஸ்​. சலம், நடிகர் சத்​ய​ராஜ் உள்​ளிட்ட 7 பேருக்கு விசிக தலை​வர் திரு​மாவளவன் விருதுகளை வழங்கி கவுர​வித்​தார். ஆண்​டு​தோறும் சட்​டமேதை அம்​பேத்​கர் பிறந்​த​நாளை​யொட்​டி, சமூகம், அரசி​யல் உள்​ளிட்ட தளங்​களில் சிறப்​பாக பணி​யாற்​றிய ஆளு​மை​களுக்கு விசிக சார்​பில் விருதுகள் வழங்​கப்​படு​கின்​றன. அந்த வகை​யில் இந்த ஆண்​டுக்​கான விருதுகள் வழங்​கும் விழா சென்​னை, கலை​வாணர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது.

விழாவுக்​கு, முன்​னிலை வகித்த விசிக பொதுச் செய​லா​ளர் துரை.ரவிக்​கு​மார் எம்.பி. வரவேற்​புரை​யாற்​றி​னார். அப்​போது, அமெரிக்​காவை சேர்ந்த ஆய்வு மாணவர் மைக்​கேல் எழு​தி, கேம்​பிரிட்ஜ் பல்​கலைக்​கழகம் வெளி​யிட்ட விசிக குறித்த புத்​தகத்தை ரவிக்​கு​மார் திரு​மாவளவனிடம் வழங்​கி​னார்.

விசிக பொதுச்​செய​லா​ளர் சிந்​தனைச்​செல்​வன் எம்.எல்​.ஏ. நோக்​க​வுரை​யாற்​றி​னார். விழாவை கட்​சி​யின் தலை​வர் திரு​மாவளவன் தலை​மையேற்று நடத்​தி​னார். விரு​தாளர்​களின் வாழ்க்​கைப் பயணம் குறித்த தகு​தி​யுரையை வாசித்த திரு​மாவளவன், 7 பேருக்​கான விருதுகளை​யும் வழங்​கி​னார்.

அதன்​படி, ஆந்​தி​ரா​வில் உள்ள திரா​விட பல்​கலைக்​கழக முன்​னாள் துணைவேந்​தர் கே.எஸ்​.சல​முக்கு ‘அம்​பேத்​கர் சுடர்’ விருது, நடிகர் சத்​ய​ராஜுக்கு ‘பெரி​யார் ஒளி’ விருது வழங்​கப்​பட்​டது. அதே​போல, புதுச்​சேரி முன்​னாள் முதல்​வர் வெ.​வைத்​திலிங்​கத்​துக்கு ‘காம​ராசர் கதிர்’ விருது, பவுத்த ஆய்​வறிஞர் பா.ஜம்​புலிங்​கத்​துக்கு ‘அயோத்​தி​தாசர் ஆதவன்’ விருது, தமிழ் தேசிய விடு​தலை இயக்க பொதுச்​செய​லா​ளர் தியாகு​வுக்கு ‘மார்க்ஸ் மாமணி’ விருது, தமிழ்​நாடு ஜமா அத்​துல் உலமா சபை தலை​வர் பி.ஏ.​காஜா முயீனுத்​தீன் பாகவிக்கு ‘கா​யிதேமில்​லத் பிறை’ விருது, யாழ்ப்​பாண தமிழறிஞர் அ.சண்​முக​தாஸுக்கு ‘செம்​மொழி ஞாயிறு’ விருது ஆகியவை வழங்​கப்​பட்​டன.

தொடர்ந்​து, திரா​விடம் குறித்து எழு​திய புத்​தகத்தை திரு​மாவளவனிடம் கே.எஸ்​.சலம் வழங்​கி​னார். இதையடுத்து விரு​தாளர்​கள் ஏற்​புரை​யாற்​றினர். விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது: தொடக்​கத்​தில் சில தரப்​பினரோடு இணைந்து இயங்​கு​வ​தில் சிக்​கல் இருந்​தது. பின்​னர் மார்க்​சி​ய​வா​தி​கள், பெரி​யாரிய வாதி​கள் என அனைத்து தரப்​போடும் இணைந்து இயங்க முடி​யும் என்​பதை விசிக உறுதி செய்​தது.

பெரி​யாரும் அம்​பேத்​கரும் ஒரே திசை​யில் பயணித்​தவர் என்​பதை நாம் தெளிவுபடுத்​தினோம். இதெல்​லாம் இந்​திய அரசி​யலின் புதிய முயற்​சிகள். 10 ஆண்​டு​களுக்​குப் பிறகு கருத்​தி​யல் ஆளு​மை​களாக இருப்​பது விசிக​வினர் தான். அப்​போது தமிழக அரசி​யலை தீர்​மானிக்​கும் சக்​தி​யாக விசிக விளங்​கும். தேசி​யப் பாதை​யும் தேவை என்ற அடிப்​படை​யில் விசிக இயங்​கு​கிறது.

எத்​தனை இடங்​களில் போட்​டி​யிடு​வீர்​கள் என திரும்​பத் திரும்ப கேட்​கிறார்​கள். தற்​காலிக இயக்​கத்​தோடு விசிகவை ஒப்​பிடு​கிறார்​கள் என்றே கருதுகிறேன். திருநீறை அழித்​து​விட்​டான் திரு​மாவளவன் என்று அரசி​யல் பேசுகிறார்​கள். எங்​களைப் பற்றி பேசிக் கொண்டே இருங்​கள். ஏனென்​றால் புதிய இந்​தி​யாவை உரு​வாக்​கு​வதற்​காக போராடிக் கொண்​டிருக்​கிறோம். எங்​களை டீ, பன் கொடுத்து ஏமாற்​றி​விடலாம் என கணக்கு போடாதீர்​கள்.

10 தொகு​தி​களுக்கு மேல் கொடுத்து ஊக்​கப்​படுத்த மாட்​டோம் என்று பேசுவது அவர்​கள் மதிப்​பீடு. ஆனால் 234 தொகு​தி​களுக்​கும் விசிக தகு​தி​யானது. அந்த வலிமை எங்​களுக்கு உண்​டு. இதை ஆணவத்​தில் சொல்​ல​வில்​லை. சமூக மாற்​றத்​தின் பார்வை அடிப்​படை​யில் சொல்​கிறேன்.

இவ்​வாறு அவர் பேசி​னார். முன்​ன​தாக விசிக துணை பொதுச்​செய​லா​ளர் வன்​னியரசு நிகழ்ச்​சியை தொகுத்து வழங்​கி​னார். தலைமை நிலை​யச் செய​லா​ளர் பாலசிங்​கம் நன்​றி​யுரை​யாற்​றி​னார். நிகழ்​வில், விசிக எம்​எல்​ஏக்​கள், விசிக அமைப்​புச் செய​லா​ள​ரும் முன்​னாள் மாமன்ற உறுப்​பினரு​மான லயன் ஆர்​.பன்​னீர்​தாஸ், 190-வது வட்​டச் செய​லா​ளர்​ சிட்​டு (எ) ஆமோஸ்​ உட்​பட ஏராள​மானோர்​ பங்​கேற்​றனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here