கொற்றிக்கோடு: கஞ்சாவுடன் கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் கைது

0
205

கொற்றிக்கோடு காவல் நிலைய போலீசார் நேற்று (ஜூன் 19) குமாரபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை தடுத்து சோதனையிட்டபோது மோட்டார் சைக்கிளில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

விசாரணையில் அவர்கள் ராகுல் (22) விக்னேஷ் (20), பாலாஜி (21) என்பது தெரிய வந்தது. இவர்கள் தூத்துக்குடியில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர். போலீசார் கஞ்சா, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர். இதில் விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரி 2ம் ஆண்டு மாணவராகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here