கிள்ளியூர் ஒன்றியம், கொல்லங்கோடு நகர திமுக சார்பில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கண்ணநாகம் சந்திப்பில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் அட்வகேட் ரமேஷ் தலைமை தாங்கினார். அவை தலைவர் தாஸ், நகர துணை செயலாளர்கள் ரபி, சுனிதா முன்னிலை வகித்தனர்.
கொல்லங்கோடு நகர இளைஞரணி அமைப்பாளர் மெஜில் வரவேற்றார். மாநில பேச்சாளர் குழந்தை வேலு சிறப்பு உரையாற்றினார். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் தத்தேயு பிரேம் குமார், அறங்காவலர் குழு உறுப்பினர் ஷைன் குமார், திமுக மாவட்ட பிரதி அப்துல் ரகுமான், ஆசிரியர் விபின் ஜோஸ், மாவட்ட பேச்சாளர் ஸ்டெலின் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.