Home 2024
Yearly Archives: 2024
குமரி: காங்கிரஸ் சார்பில் தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மரியாதை
கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த 68 - ம் ஆண்டு விழா இன்று (நவ-1 ) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுக்கடையில் உள்ள தியாகிகள் நினைவு ஸ்தூபியில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மலர் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமை வகித்தார். ராஜேஷகுமார் எம் எல் ஏ ஸ்தூபிக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் தாரகை கத்பட் எம் எல் ஏ , மாநில மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான்,...
IPL Player Retentions: 10 அணிகளின் கைவசம் உள்ள தொகை எவ்வளவு?
எதிர்வரும் ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக ஐபிஎல் நிர்வாகக்குழு தெரிவித்திருந்த கெடு தேதி அன்று 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை தக்கவைத்துள்ளது. அதே போல மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மீண்டும் விளையாடுகிறார். இப்படியாக பல்வேறு முன்கணிப்புகளை 10 அணிகளும் தகர்த்து தங்களுக்கு தேவையான வீரர்களை அணியில் தக்க வைத்துள்ளன. இந்த சூழலில் மெகா ஏலத்துக்கு முன்னதாக 10 அணிகளின் கைவசம் உள்ள தொகை...
அமரன் Review: சிவகார்த்திகேயனின் ‘புதிய’ பாய்ச்சல் எப்படி?
2014-ம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகள் உடனான மோதலில் வீரமரணம் அடைந்த சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியுள்ள படம் ‘அமரன்’.
கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க, சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்ததுமே இப்படத்துக்கான எதிர்பார்ப்பும் அதிகமானது. அது படத்தின் டிக்கெட் முன்பதிவிலும் எதிரொலித்ததை பார்க்க முடிந்தது. இத்தகைய எதிர்பார்ப்புடன் தீபாவளி ரேஸில் களமிறங்கிய ‘அமரன்’ அதை பூர்த்தி செய்ததா என்று பார்க்கலாம்.
படத்தின் ஒன்லைன் ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்ததுதான். சென்னையை அடுத்த தாம்பரத்தைச் சேர்ந்த...
“தமிழ் சினிமாவின் பெருமை” – ‘அமரன்’ படத்துக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பாராட்டு!
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள ’அமரன்’ படத்துக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மும்பையில் அமரன் படத்தைப் பார்த்தேன், தமிழ் சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன. இந்தப் படம் என்னை மிகவும் உணர்ச்சிவசப்படுத்தியது. இந்த அற்புதத்தை கொண்டு வந்த இந்த துறையில் ஒரு பகுதியாக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன்.
அசோக் சக்ரா விருது பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை மற்றும் அவரது வீர மரணம், திரைப்படத்தின்...
ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி, அமைச்சர் ராஜ்நாத் சிங்
நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி, குஜராத்தின் கச்சிலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அசாமின் தேஜ்பூரிலும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினர்.
கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பின்பு முதல்முறையாக குஜராத் மாநிலத்தின் கச் பகுதியில் ராணுவ வீரர்களுடன் இந்த தீபாவளியை பிரதமர் மோடி கொண்டாடினார். அப்போது வீரர்களிடையே பிரதமர் கூறுகையில், "தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்தில் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின்...
BPL நிறுவனர் டிபிஜி நம்பியார் காலமானார்
பிபிஎல் நிறுவனத்தின் நிறுவனரும் தொழிலதிபருமான டிபி கோபாலன் நம்பியார், வியாழக்கிழமை (அக்.31) காலமானார். அவருக்கு வயது 94. அவரது மறைவுக்கு அவரின் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1963-ல் கேரள மாநிலம் பாலக்காட்டில் பிபிஎல் நிறுவனத்தை நிறுவினார். பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் பணியாற்றிய அனுபவம் கொண்ட டிபிஜி நம்பியார், இந்தியாவின் தரமான எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நோக்கில் பிபிஎல் நிறுவனத்தை தொடங்கினார்.
மருத்துவ உபகரணங்கள், தொலைக்காட்சி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் ஓவன், ஏசி, ஆடியோ சாதனம்,...
ஈரோடு ஜவுளிக்கடைகளில் அதிகாலையில் குவிந்த பொதுமக்கள்: அதிரடி தள்ளுபடி விற்பனையால் உற்சாகம்
ஈரோடு ஜவுளிக்கடைகளில் 50 சதவீதம் வரை அதிரடி தள்ளுபடியில், ஜவுளி வகைகளை வாங்க, இன்று அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால், கடைவீதி களைகட்டி காணப்பட்டது.
தென் இந்திய அளவில் ஜவுளி விற்பனைக்கு புகழ் பெற்ற நகரமாக ஈரோடு விளங்குகிறது. இங்கு வாரம் தோறும் நடைபெறும் ஜவுளிச்சந்தையில், குறைந்த விலையில் அனைத்து வகையான ஜவுளி ரகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், வாரம் தோறும், ஏராளமான வியாபாரிகள், ஈரோடு ஜவுளிச்சந்தையில், ஜவுளி கொள்முதல் செய்து...
கோவையில் விபத்தில் உயிரிழந்த பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்: முதல்வர் நிவாரண நிதி அறிவிப்பு
கோவையில் சாலை விபத்தில் உயிரிழந்த பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதியும் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவந்த கிருஷ்ணவேணி (வயது 51) க/ப.சக்திவேல் என்பவர் நேற்று (31.10.2024) மாலை அங்கலக்குறிச்சியிலுள்ள தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பணிக்கு சென்றுகொண்டிருந்தபோது ஆனைமலை வட்டம், கோட்டூர் அருகில் எதிரே...
எச்சில் தட்டில் சோறு.. கணவரிடம் பேச கூடாது.. மருமகளை காலி செய்த கன்னியாகுமரி மாமியார்.. இப்ப பாருங்க
கன்னியாகுமரி: "ஸாரி..ம்மா.. என்னை மன்னித்திடுங்க.. எனக்கு வாழாவெட்டியாக வீட்டில் வந்து இருக்க விருப்பமில்லை.. அதனால் மட்டும்தான் நான் இப்போ போகிறேன்" என்று ஆடியோவில் பேசி உயிரையும் விட்டிருந்தார் கன்னியாகுமரி புதுமணப்பெண்.. இவரது மரணத்துக்கு முழுமுதற் காரணமான மாமியார் என்ன ஆனார் தெரியுமா?
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெற்குமண் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்... இவர் மின்சார வாரியத்தில் வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி பெயர் ஸ்ருதி.. 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.. கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சுருதி.
ஆடியோ: கடந்த 21-ம்...
இரணியல்: பைக்குகள் மோதி விபத்து – ஆசிரியை படுகாயம்
இரணியல் அருகே காரங்காடு பகுதியை சேர்ந்தவர் சுதர்சன் மனைவி மஞ்சுஷா (33). இவர் திங்கள்நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இன்று (29-ம் தேதி) காலை பள்ளிக்கு செல்வதற்காக ஸ்கூட்டரில் புறப்பட்டுள்ளார். அப்போது எதிரே வேகமாக வந்த மற்றொரு பைக் மஞ்சுஷா பைக்கில் பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்படு படுகாயம் அடைந்த மஞ்சுஷாவை அவர் உறவினர்கள் களியங்காட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவத்தில் பைக்கில் வந்த குசவன்குடியை சேர்ந்த வினோத் என்பவருக்கும்...














