Home 2024
Yearly Archives: 2024
தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்பு
தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்ய பிரத சாஹூ சமீபத்தில் மாற்றப்பட்டார். அவருக்கு பதில், தமிழக அரசு அனுப்பிய பட்டியலில் இருந்து, அர்ச்சனா பட்நாயக்கை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணையம் தேர்வு செய்து அறிவித்தது. சத்யபிரத சாஹூ, கால்நடை பராமரிப்பு , மீன்வளம், பால்வளத்துறை செயலராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நேற்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார். 2002-ம் ஆண்டு தமிழக...
நீரிழிவு நோய்க்கு மேம்பட்ட சிகிச்சை அளிக்க ‘ஹெல்தி ஏஜிங் கிளினிக், மோகன்ஸ் ஆன் வீல்ஸ்’ திட்டங்கள்
சென்னை கோபாலபுரத்தில் உள்ள டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் நீரிழிவு நோய்க்கு மேம்பட்ட சிகிச்சை அளிக்கவும், முதியவர்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ‘ஹெல்தி ஏஜிங் கிளினிக் மற்றும் மோகன்ஸ் ஆன் வீல்ஸ்’ ஆகிய இரண்டு திட்டங்களை தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் தலைவர் மருத்துவர் வி.மோகன், நிர்வாக இயக்குநர் ம்ருத்துவர் ஆர்.எம்.அஞ்சனா, ஆலோசகர் மருத்துவர் எஸ்.உத்ரா ஆகியோர் கூறியதாவது: ஆண்டுதோறும் உலக நீரிழிவு தினம் நவம்பர் 14-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதையொட்டி, மருத்துவமனைக்கு வர முடியாத...
இந்திய கல்விமுறையை சிதைத்து சுயமரியாதையை சீரழித்தவர்கள் ஆங்கிலேயர்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்திய கல்விமுறையை சிதைத்தவர்கள் ஆங்கிலேயர்கள் என்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார். பி.செந்தில்குமார் என்பவர் எழுதிய "பாஞ்சாலங்குறிச்சி போர்கள்" நூல் வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்தது.
இந்நூலை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டு பேசியதாவது: நான் கடந்த 2021-ம் ஆண்டு தமிழகம் வந்தபோது சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வீரர்களின் பட்டியலை தமிழக அரசிடம் கேட்டுப்பெற்றேன். அந்த பட்டியலில் வெறும் 30 பேர்களின் பெயர் மட்டுமே இடம்பெற்றிருந்தன. அதை பார்த்தபோது எனக்கு...
சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை: பெருங்குடியில் 8 செ.மீ. மழை பதிவு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய மழை பெய்தது. இதன் காரணமாக சாலையோரம் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு முதல் சென்னையில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக, கே.கே.நகர், வடபழனி, கோடம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், அமைந்தகரை, கிண்டி, அண்ணாசாலை, மயிலாப்பூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்...
ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா: 24-ல் நடைபெறுவதாக பழனிசாமி அறிவிப்பு
அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா, நவ.24-ம் தேதி வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு: அதிமுக நிறுவனத் தலைவர், எம்ஜிஆரின் துணைவியாரும், முன்னாள் முதல்வருமான ஜானகி அம்மையாரின் நூற்றாண்டு விழா, அதிமுக சார்பில் சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், நவ.24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறும். ஜானகி அம்மையாரின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில்,`படத்...
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதானவருக்கு சிகிச்சை
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி கிளைச் சிறையில் இருந்த செல்வராஜிக்கு (50) திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர், நேற்று முன்தினம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள செல்வராஜ்க்கு, சிறுநீரகத்தில் கல் இருப்பதாக கூறப்படுகிறது. அதற்குரிய சிகிச்சையை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மேம்பால முறைகேடு வழக்கை மீண்டும் விசாரிக்க கோரிய மனு வாபஸ்
முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மேம்பால முறைகேடு வழக்கின் விசாரணைக்கு அளிக்கப்பட்ட ஒப்புதலை திரும்பப்பெற்றதை எதிர்த்தும், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டதால் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996 - 2001 திமுக ஆட்சியில் சென்னையில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இதில் ரூ.115 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகக்கூறி கடந்த 2001-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் மேயரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி...
தொடரும் கனமழை: அரியலூர், பெரம்பலூர், கடலூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும், சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை: கனமழை காரணமாக அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.13) விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
காரைக்கால், மயிலாடுதுறையில்.. தொடர்மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்....
கோட்டாரில் லாட்டரி சீட்டு விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் போலீசார் நேற்று மீனாட்சிபுரம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு கேரள லாட்டரி விற்றதாக தேரேக்கால்புதூர் பகுதியை சேர்ந்த நாகராஜன் (வயது 62), வெட்டூர்ணிமடம் சுப்பிரமணியன் (67) மற்றும் வடிவீஸ்வரம் பூமா(45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 70 லாட்டரிசீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
வெள்ளிச்சந்தை: கொத்தனாரை தாக்கிய வாலிபர் கைது
வில்லுக்குறி அருகே மனக்காவிளையை சேர்ந்தவர் நாகலிங்கம் மகன் சுமன் (19). கொத்தனார். இவருக்கும் அதே பகுதி சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் சொத்து பிரச்சனை உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி சுமன் வெள்ளிச்சந்தை அருகே வேலைக்கு சென்று விட்டு அன்று மழை பெய்ததால் வேலையை பாதியில் நிறுத்திவிட்டு வீடு திரும்பி உள்ளார்.
பின்னல் மதுக்கடை சென்று மது குடித்துக்கொண்டிருந்தார். அந்த சமய அங்கு சென்ற சதீஷ் மற்றும் ஆரோக்கிய பிரிட்டோ ( 34) ஆகியோர் சுமனை தாக்கியுள்ளனர். இதில் தலை உட்பட...














