Google search engine
Home 2024

Yearly Archives: 2024

மதுபான கொள்கை ஊழல் வழக்கு: கேஜ்ரிவால் மீதான விசாரணைக்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த நிதி மோசடி வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 12-ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது. சிபிஐ தொடர்ந்த வழக்கிலும் உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் அர்விந்த் கேஜ்ரிவால் மீது...

அதானி விவகாரம்: காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்

குறிப்பிட்ட மாநிலங்களில் மின் ஒப்பந்தங்களை பெறுவதற்காக அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் கால கட்டங்களில் எதிர்க்கட்சிகளே அப்போது ஆட்சியில் இருந்ததாக பாஜகவின் தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் அமித் மாள்வியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமித் மாள்வியா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற கூட்டம் தொடங்குவதற்கு (நவ.25) முன்பாக, அதே போல டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியை ஏற்க உள்ள நிலையில் அதானி மீதான குற்றச்சாட்டு வெளிவந்துள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது.மேலும், லஞ்ச குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ள காலத்தில் ( 2021 ஜூலை...

இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,100 கோடி லஞ்சம்: அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் – வழக்கின் பின்னணி என்ன? 

தமிழகம், ஆந்திரா, ஒடிசா, ஜம்மு-காஷ்மீர், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கவுதம் அதானிக்கு எதிராக அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. அதானி குழும நிறுவனங்களின் தலைவர் கவுதம் அதானி (62), உலக பணக்காரர் பட்டியலில் 17-வது இடத்திலும், இந்திய அளவில் 2-வது இடத்திலும் உள்ளார். இந்த நிலையில், கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி (அதானி கிரீன்...

தமிழ்ப் பல்கலை.​யில் 40 பேரை பணி நியமனம் செய்தது தொடர்பாக விசா​ரணை குழு: ஆளுநர் ஆர்.என்​.ரவி உத்தரவு

தமிழ்ப் பல்கலைக்​கழகத்தில் 40 பேர் பணி நியமனம் தொடர்பாக ஓய்வு​பெற்ற நீதிபதி தலைமை​யில் விசா​ரணைக் குழு அமைத்து ஆளுநர் ஆர்.என்​.ரவி உத்தர​விட்​டுள்​ளார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்​தின் 13-வது துணைவேந்​தராக வி.திரு​வள்​ளுவன் 2021-ம் ஆண்டு டிச.11-ம் தேதி பொறுப்​பேற்​றார். இவரது பணிக்​காலம் டிச. 12-ம் தேதி​யுடன் நிறைவடைய உள்ள நிலை​யில், தமிழக ஆளுநரால் நேற்று முன்​தினம் பணியிடை நீக்கம் செய்​யப்​பட்​டார். 2017-2018-ம் ஆண்டில் பல்கலைக்​கழகத்​தில் துணைவேந்​தராக பாஸ்​கரன் இருந்த​போது, பேராசிரியர், உதவிப் பேராசி​ரியர்கள் 40 பேர் பணி நியமனம் செய்​யப்​பட்​டனர். இவர்களை தகுதி​காண் பருவம் நிறைவு...

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 8,355 கனஅடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு நேற்று முன் தினம் விநாடிக்கு 9,269 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 8,355 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1,000 கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் நேற்று 107.91 அடியில் இருந்து 108.32 அடியாகவும், நீர் இருப்பு 75.47 டிஎம்சியில் இருந்து 76.04 டிஎம்சியாகவும் உயர்ந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 19-ம் தேதி விநாடிக்கு 9,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று முன்தினம் 8,500 கனஅடியாக...

கோயில் பணத்தை சூறையாடி வரும் இந்து சமய அறநிலைய துறையை கலைக்க வேண்டும்: பொன் மாணிக்கவேல் ஆவேசம்

இந்து சமய அறநிலையத் துறை கோயில் பணத்தை சூறை​யாடி வருகிறது. எனவே, அறநிலையத் துறையை கலைத்துவிட வேண்​டும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்​னாள் ஐ.ஜி. பொன் மாணிக்க​வேல் கூறினார். சேலம் சுகவனேஸ்​வரர் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்த பொன்​.​மாணிக்க​வேல், பின்னர் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அறநிலையத் துறை அமைச்சர் தொடங்கி அதிகாரிகள் வரை, மக்கள் வரிப் பணத்​திலிருந்து ஆண்டுக்கு ரூ.428 கோடி ஊதியம் வழங்​கப்​படு​கிறது. கோயில் கணக்​குகளை தணிக்கை பார்க்க ரூ.228 கோடி செலவிடப்​பட்​டுள்​ளது. தனி மனிதர் தவறு செய்​தால் தண்டிக்​கும் நிலை​யில்,...

ஜெயலலிதாவின் பணத்தை வைத்து கோடீஸ்வரர்களாக மாறிய ஆயிரம் குடும்பங்கள்: திண்டுக்கல் சீனிவாசன் கருத்து

முன்​னாள் முதல்வர் ஜெயலலி​தா​வின் பணத்தை வைத்து சசிகலா, டிடி​வி.​தினகரன் என ஆயிரம் குடும்​பங்கள் கோடீஸ்​வரர்​களாகி​விட்​டனர் என்று அதிமுக முன்​னாள் அமைச்சர் திண்​டுக்கல் சீனிவாசன் கூறினார். நாகை மாவட்ட அதிமுக அலுவல​கத்​தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்​றது. முன்​னாள் அமைச்​சர்கள் திண்​டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஓ.எஸ்​.மணியன் உள்ளிட்டோர் பங்கேற்​றனர். கூட்​டத்​தில் திண்​டுக்கல் சீனிவாசன் பேசி​ய​தாவது: முன்​னாள் முதல்வர் ஜெயலலி​தாவுக்கு உதவியாக வந்தவர்​கள்​தான் சசிகலா, டிடி​வி.​தினகரன் உள்ளிட்​டோர். ஆனால், அவர்​கள், அவர்​களைச் சேர்ந்​தவர்கள் என ஆயிரம் குடும்பத்​தினர் ஜெயலலி​தா​வின் பணத்தை வைத்து கோடீஸ்​வரர்​களாகி விட்​டார்​கள். அந்தப் பணத்தை...

திருச்செந்தூர் ‘தெய்வானை’ உட்பட சில கோயில் யானைகளுக்கு வனத்துறை அனுமதி இல்லை: அமைச்சர் பொன்முடி தகவல்

திருச்​செந்​தூர் கோயி​லின் ‘தெய்​வானை’ உட்பட சில கோயில் யானைகள் வனத்​துறை அனும​தி​யின்றி பயன்​படுத்​தப்​படு​வதாக அமைச்சர் பொன்​முடி தெரி​வித்​துள்ளார். சென்னை தலைமைச் செயல​கத்​தில் வனத்​துறை அமைச்சர் பொன்​முடி கூறிய​தாவது: மாமல்​லபுரம் - புதுச்​சேரி இடையே தேசிய நெடுஞ்​சாலை அமைக்க திட்​ட​மிடப்​பட்டு, அந்த சாலை​யின் நடுவே சில இடங்​களில் வனத்​துறை நிலங்கள் வருவ​தால் சாலை பணிகள் முழுமை பெறாமல் உள்ளன. அப்பகு​தி​களில் வனத்​துறை சார்​பில் தேசிய நெடுஞ்​சாலை ஆணையத்​துக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்​துள்ளோம். யானை, புலி உள்ளிட்ட வன உயிரினங்களை பாது​காக்க வனத்​துறை...

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு அரசு அனுமதி தரவில்லை: தமிழக இயற்கை வளங்கள் துறை விளக்கம்

மதுரை மாவட்டம் நாயக்​கர்​பட்​டி​யில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்​தான் ஜிங்க் நிறு​வனத்​துக்கு தமிழக அரசு சார்​பில் எந்த அனும​தி​யும் வழங்​கப்​பட​வில்லை என்று தமிழக இயற்கை வளங்கள் துறை தெரி​வித்​துள்ளது. ஸ்டெர்​லைட் நிறு​வனத்தை நடத்திய வேதாந்தா குழு​மத்தை சேர்ந்தது இந்துஸ்​தான் ஜிங்க் நிறு​வனம். இந்த நிறு​வனம், டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்​ப​தற்காக மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்​தில் உள்ள அரிட்​டாபட்டி, மீனாட்​சிபுரம், கூலானிப்​பட்டி, செட்​டி​யார்​பட்டி, அ.வல்​லா​ளப்​பட்டி, சண்முகநாத​புரம், நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்​கலம் உள்ளிட்ட ஊர்களை உள்ளடக்கிய சுமார் 5,000 ஏக்கர் நிலத்தை ஏலம் எடுத்​துள்ளது. சுரங்​கங்​கள்,...

லண்டனில் இருந்து நவ.28-ம் தேதி தமிழகம் திரும்பும் அண்ணாமலையின் அடுத்த திட்டங்கள் என்ன?

லண்டனில் படிப்பை முடித்து​விட்டு தமிழகம் திரும்​பும் அண்ணாமலை பல்வேறு புதிய செயல்​திட்​டங்களை வகுத்​திருப்​ப​தாக​வும், குறிப்பாக 2026 சட்டப்​பேரவை தேர்​தலில் திமுக அரசை வீழ்த்த புது வியூகங்களை அமைத்​திருப்​ப​தாக​வும் தகவல் வெளி​யாகி உள்ளது. ஆக்ஸ்​போர்டு பல்கலைக்​கழகத்​தில் அரசியல் படிப்பை மேற்​கொள்ள ஆக.28-ம் தேதி லண்டன் புறப்​பட்டு சென்​ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, படிப்பை முடித்து​விட்டு, நவ.28-ல் சென்னை திரும்​பு​கிறார். அப்போது சென்னை விமான நிலை​யத்​தில் பாஜக​வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். தொடர்ந்து, நவ.29-ம் தேதி சென்னை கமலால​யத்​தில் கட்சி நிர்​வாகிகளை சந்திக்க திட்​ட​மிட்டுள்​ளார்....

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி: தடையை மீறிய 9 கனிமவள லாரிகள் பறிமுதல்

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வள லாரிகள் செல்வதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. தடை விதித்துள்ளனர். புதுக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 4 வழி சாலை பகுதியில் இன்று 7-ம்...

கன்னியாகுமரி: இரு தினங்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை

கன்னியாகுமரி  உட்பட தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் (மே 7, 8) இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அக்னி வெயில் கடந்த 4ஆம்...

சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் ஒப்பந்தம்

’சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘தாய் கிழவி’ இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கவுள்ள ‘சேயோன்’ படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிவகார்த்திகேயன். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில்...