Google search engine
Home 2024

Yearly Archives: 2024

வன்​கொடுமையை கண்டித்து போராட்டம்: அதிமுக, பாஜகவினர் 1500 பேர் மீது வழக்கு

மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக, பாஜகவை சேர்ந்த 1,500 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்து பல்கலைக்கழகத்துக்கு எதிரே அதிமுகவினர் கடந்த 26-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது, இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திடீரென சாலை தடுப்பின் மீது ஏறி, தமிழக அரசு மற்றும் காவல் துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட...

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிப்பு

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிச.28-ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார். அவரது உடலுக்கு லட்சக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்திய நிலையில், இறுதிச் சடங்கில் அரசு மரியாதையும் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னையில் கட்சித் தலைமையகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு, அங்கு நாள்தோறும் பூஜையும், அன்னதானமும் செய்யப்படுகிறது. இந்நிலையில், விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படவுள்ளது. இதற்கான குருபூஜையில் பங்கேற்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முதல் தவெக...

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திக்கு அனுமதிக்க வணிகர்கள் வலியுறுத்தல்

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் அசோசியேஷன் தலைவர் ஜி.சங்கரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 2019 முதல் தடை விதிக்கப்பட்டது. அத்தகைய பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வோர் பெரும்பாலும் குறு நிறுவனங்களாக உள்ளன. லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கிய இத்தொழில் முடங்கியுள்ளது. இந்நிலையில் உற்பத்தி, வைத்திருத்தல், விற்பனை ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்ட 14...

வேளச்​சேரி – பரங்​கிமலை இடையே 2025 மார்ச்சில் ரயில் சேவை தொடங்​க திட்டம்

‘வேளச்சேரி-பரங்கிமலை இடையே அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ரயில் சேவை தொடங்கப்படும்’ என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, கடந்த 1985-ம் ஆண்டு பறக்கும் ரயில் சேவை திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து, முதற்கட்டமாக 1997-ம் ஆண்டு சென்னை கடற்கரை-மயிலாப்பூர் இடையே 9 கி.மீட்டர் தூரத்துக்கு ரூ.266 கோடியில் ரயில் பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது. 2-ம் கட்டமாக மயிலாப்பூர்-வேளச்சேரி இடையே ரூ.877 கோடி செலவில் ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 3-ம் கட்டமாக 2008-ம்...

அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாதவர் மன்மோகன் சிங்: ஆளுநர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர் மன்மோகன் சிங் என அரசியல் கட்சிகளின் தலைவர்கள் புகழாரம் சூட்​டி​யுள்​ளனர். ஆளுநர் ஆர்.என்​.ரவி: பணிவு மற்றும் நேர்​மை​யின் உருவமாக விளங்​கியவர் மன்மோகன் சிங். இந்தியா பொருளா​தா​ரத்​தின் சவாலான காலகட்​டத்​தில் விலைம​திப்பற்ற பங்களிப்பை வழங்​கிய​வர். அவரது அர்ப்​பணிப்பு என்றும் நினை​வு​கூரப்​படும். துணை முதல்வர் உதயநிதி: இந்திய பொருளா​தா​ரத்தை மன்மோகன் சிங்​கின் காலகட்​டத்​துக்கு முன் - பின் என குறிப்​பிடும்​படியாக மாற்றியமைத்​தவர். அவரது மறைவு நாட்டுக்கே பேரிழப்பு. அதிமுக பொதுச்​செய​லாளர் பழனிசாமி: மன்மோகன் சிங்​கின் நிதிக் கொள்​கைகள் தான் நம் நாட்​டின் பொருளா​தா​ரத்தை...

நெமிலி அருகே விபத்தில் உயிரிழந்த ஹவில்தார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

நெமிலி அடுத்த ஆட்டுப்​பாக்​கத்​தில் சாலை விபத்​தில் உயிரிழந்த ஹவில்​தார் குடும்பத்​துக்கு முதல்வர் மு. க.ஸ்​டா​லின் ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்​கீடு செய்து நேற்று அறிவித்​தார். காஞ்​சிபுரம் மாவட்டம் பள்ளம்​பாக்கம் கிராமத்​தைச் சேர்ந்​தவர் செந்​தில்​வேல் (34). இவர், சென்னை தலைமை செயல​கத்​தில் உள்வட்ட பாது​காப்பு வாகன பிரிவு அணியில் ஹவில்​தாராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி புஷ்மிதா (27). தம்ப​தி​யருக்கு 2 குழந்தைகள் உள்ளன. செந்தில்வேல் தனது வீட்​டிலிருந்து இரு சக்கர வாகனத்​தில் வந்து அரக்​கோணம் ரயில் நிலை​யத்​தில் இரு சக்கர வாகனத்தை விட்டு...

விஜய் விரைவில் சுற்றுப்பயணம்

0
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அவர் தனது சுற்றுப்பயணத்தை ஜனவரி 27-ம் தேதி தொடங்க இருப்பதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பாலியல் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ​யிடம் ஒப்படைக்க வேண்​டும் என்று அதிமுக பொதுச்​ செய​லாளர் பழனிசாமி தெரி​வித்​துள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னை​யில் நேற்று செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அண்ணா பல்கலைக்கழக வளாகத்​துக்​குள் ஞானசேகரன் என்பவர் அத்து​மீறி நுழைந்து, மாணவர் ஒருவரை அடித்து உதைத்து​விட்டு உடன் இருந்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்​றுள்​ளார். அதை செல்​போனிலும் படம் எடுத்​துள்ளார். அப்போது அவர் செல்​போனுக்கு அழைப்பு வந்த​தாக​வும், அவர் ஒருவரிடம் சார் சார் என்று பேசி​யதாக​வும் அந்த மாணவர் புகாரில் தெரி​வித்​துள்ளார். அந்த சார் யார்...

மாணவி பாலியல் துன்புறுத்தல்: பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு புகார் வரவில்லை – அமைச்சர் கோவி.செழியன்

அண்ணா பல்கலைக்​கழகத்​தில் நேற்று ஆய்வு மேற்​கொண்ட உயர்​கல்​வித் துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அண்ணா பல்கலைக்​கழகத்​தில் கடந்த 23-ம் தேதி நடந்த அசம்பாவித சம்பவம் தொடர்பாக 25-ம் தேதி காவல்​துறை​யில் புகார் செய்​யப்​பட்​டது. புகார் மனு பெற்ற குறுகிய காலத்​திலேயே அந்த நபர் கைது செய்​யப்​பட்​டார். தொடர்ந்து விசாரணை நடந்​து​ கொண்​டிருக்​கிறது. பல்கலைக்​கழகத்​தில் நடந்த சம்பவம் தொடர்பாக போஷ் கமிட்​டிக்கு (பாலியல் துன்​புறுத்தல் தடுப்பு குழு) புகார் வரவில்லை. அதேநேரத்​தில் காவல்​துறை​யில் புகார் செய்​யப்​பட்டு விசாரணை நடந்து வருகிறது. பல்கலைக்கழக நிர்​வாகம் காவல்​துறை விசா​ரணைக்கு...

தமிழகத்தில் ஜன.2 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்திக்​குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வட தமிழகத்​தில் வடகிழக்​குப் பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதிவான மழை அளவு​களின்படி வட தமிழகத்​தில் பெரும்​பாலான இடங்​களி​லும், தென் தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும் மழை பெய்​துள்ளது. அதிகபட்​சமாக திரு​வள்​ளூர் மாவட்டம் திருத்​தணி​யில் 8 செமீ மழை பதிவாகி​யுள்​ளது. புதுச்​சேரி, காரைக்​கால்: தெற்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்​கடல் பகுதி​களில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவு​கிறது....

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி: பாஜகவை பார்த்து முதல்வர் பயப்படுகிறார் -நயினார்

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், வருகின்ற 15ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய நாகர்கோவில் வரும் பிரதமர் மோடி, ரோட்...

நாகர்கோவிலில் வாக்கு என்னும் மையத்தில் தீவிர ஏற்பாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தல் பணிகளின் ஒரு பகுதியாக, ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பெட்டிகள் கோணம் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன....

குமரி: கோவிலில் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள நாராயணசாமி கோவிலில் நேற்று மாலை பணி விடை செய்ய சென்ற பூசாரி செல்வகுமார், கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டார். சாமி கழுத்தில் இருந்த தங்க சங்கிலி,...