பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ராஜஸ்தான் மாநிலத்தில் 20 பேர் உயிரிழப்பு

0
17

ராஜஸ்​​தானின் ஜெய்​சால்​மரிலிருந்து ஜோத்​பூர் நோக்கி செல்​லும் தனி​யார் பேருந்து நேற்று பிற்​பகல் 57 பயணி​களு​டன் புறப்​பட்டது. போர் அருங்​காட்​சி​யகம் அருகே தையத் கிராமத்​தில் சென்​றுகொண்​டிருந்​த​போது அந்​தப் பேருந்​தின் பின்புறத்திலிருந்து திடீரென தீப்​பற்றி பேருந்து முழு​வதும் மளமளவென பரவி​யது.

இதில், பயணி​கள் அவசர​மாக வெளி​யேற முடி​யாமல் சிக்​கிக் கொண்​ட​தால் 20 பேர் உடல் கருகி பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். மேலும், 15 பயணி​கள் கடுமை​யான தீக்​கா​யங்​களு​டன் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

ராஜஸ்​தான் முதல்​வர் பஜன்​லால் சர்​மா, பேருந்து விபத்​தில் உயி​ரிழந்​தவர்​களுக்கு இரங்​கல் தெரி​வித்​துள்​ளதுடன், காயமடைந்​தவர்​களுக்கு உரிய சிகிச்​சை அளிக்​க அதி​காரி​களுக்​கு உத்​தர​விட்​டார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here