லூவ்ரே அருங்காட்சியக கொள்ளை வழக்கில் 2 சந்தேக நபர்கள் கைது

0
14

பி​ரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள புகழ்​பெற்ற அருங்​காட்​சிகம் லூவ்​ரே.

கடந்த வாரம் கிரேன் ஒன்​றின் உதவி மூலம், மியூசி​யத்​தின் மேல்​மாடி ஜன்​னல் வழி​யாக நுழைந்த கொள்​ளை​யர்​கள் மன்​னர் நெப்​போலியன் காலத்து கிரீடம் மற்​றும் பிரெஞ்சு ராணி​கள் அணிந்த நெக்​லஸ் உட்பட 8 விலை உயர்ந்த நகைகளை கொள்​ளை​யடித்து விட்டு மோட்​டார் சைக்​கிளில் தப்​பிச் சென்​றனர். இவற்​றின் மொத்த மதிப்பு 102 மில்​லியன் டாலர் என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து பாரீஸ் சிறப்பு படை போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வந்​தனர். இந்​நிலை​யில் இந்த கொள்ளை சம்​பவம் தொடர்​பாக சந்​தேக நபர்​கள் இரு​வரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். இவர்​களிடம் தீவிர வி​சா​ரணை நடை​பெற்​று வரு​கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here