தங்கள் முழு ஆற்றலை பெண்கள் உணர வேண்டும்: குடியரசுத் தலைவர் முர்மு வலியுறுத்தல்

0
17

பெண்​களின் வலிமை மற்​றும் சாதனை​களைப் பாராட்​டிய குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, பெண்​கள் தங்கள் முழு ஆற்​றலை உணர வேண்​டும் என வலி​யுறுத்​தி​னார்.

சர்​வ​தேசப் பெண்​கள் தினத்தை முன்​னிட்டு மத்திய பெண்​கள் மற்​றும் குழந்தைகள் மேம்​பாட்டு அமைச்​சகம் ஏற்​பாடு செய்த நிகழ்ச்​சி​யில், குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு பங்கேற்று பேசி​ய​தாவது: கல்​வி, நிர்​வாகம், நீதித்​துறை, பாது​காப்​பு, மருத்துவம், அறி​வியல், தொழில்​நுட்​பம், கலைகள், தொழில் ​முனைவு மற்​றும் விளை​யாட்டு ஆகிய அனைத்​துத் துறை​களி​லும் பெண்​கள் முக்​கிய பங்​காற்​றுகின்​றனர்.

சுய உதவிக் குழுக்​கள் மூலம் ஊரக பெண்​களும், பொருளா​தார ரீதி​யாக தற்​சார்பு நிலையை அடைந்து வரு​கின்​றனர். கிராம வளர்ச்​சி, வேலை​ வாய்ப்​பு, ஸ்டார்ட்-அப் மற்​றும் கார்ப்​பரேட் துறை​யில் பெண்​கள் தலைமை தாங்​கு​கின்​றனர். பெண்​கள் தங்கள் முழு ஆற்​றலை உணர வேண்​டும். இவ்​வாறு முர்மு கூறினார்.

பிரதமர் மோடி நேற்று வெளி​யிட்ட வாழ்த்து செய்​தி​யில், “சர்வதேச பெண்​கள் தினத்​தில், நமது பெண்​களுக்கு வாழ்த்​துகள். அனைத்து துறை​யிலும், பெண்​கள் உறு​தி​யுட​னும், படைப்பாற்றலுட​னும், ஈடு இணை​யற்ற ஆர்​வத்​துட​னும் நாட்டை முன்​னேற்​றம் அடையச் செய்​கின்​றனர்.

அவர்​களின் சாதனை​கள் நமது தேசத்​துக்கு ஊக்​குவிப்பை அளிக்கின்​றன. வளர்ச்​சி​யடைந்த பாரதத்தை உரு​வாக்​கும் நமது தீர்​மானத்​துக்கு வலிமை சேர்க்​கின்​றன. வளமான தேசத்​துக்கு பெண்​களின் பங்​களிப்பு தொடர்ந்து வழி​காட்​டும்” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here