மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ கிளியூர் சட்டமன்ற தொகுதியில் ஊராட்சிகள் தோறும் பாதயாத்திரை நடத்தி வருகிறார். இன்று 7 வது நாளாக நடைக்காவு மற்றும் வாவறை ஊராட்சிகளில் பாதயாத்திரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்களை அவர் சந்தித்தார். இதில் மாவட்ட, வட்டார, ஊராட்சி காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் 100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.














