இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போரை நிறுத்த அமைதித் திட்டத்தை அறிவித்தது அமெரிக்கா

0
28

இஸ்​ரேல்​-ஹ​மாஸ் இடையே போரை நிறுத்த 21 அம்ச அமை​தித் திட்​டத்தை அமெரிக்கா அறி​வித்​துள்​ளது. பாலஸ்​தீனத்திலுள்ள காசா முனையை நிர்​வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்​குழு​வினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்​குள் புகுந்து தீவிர​வாத தாக்​குதல் நடத்​தினர். இந்த தாக்​குதலில் 1,139 இஸ்​ரேலியர்​கள் கொல்​லப்​பட்​டனர். மேலும், இஸ்​ரேலில் இருந்து 251 பேரை பிணைக் கைதி​களாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்​திச் சென்​றது.

இதையடுத்​து, ஹமாஸ் ஆயுதக்​குழு மீது போர் அறி​வித்த இஸ்​ரேல், காசா முனை​யில் அதிரடி தாக்​குதல் நடத்தி வரு​கிறது. காசா மீது இஸ்​ரேல் நடத்தி வரும் போரில் சுமார் 65,000-க்​கும் அதி​க​மான பாலஸ்​தீனர்​கள் உயி​ரிழந்​துள்​ளனர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. இந்​நிலை​யில் காசா​வில் போரை நிறுத்​து​வதற்​கான ஒப்​பந்​தத்தை இறுதி செய்​யும் முயற்​சி​யில் அமெரிக்கா ஈடு​பட்டு உள்​ளது.

ஹமாஸிட​மிருந்து பிணைக் கைதி​களை மீட்டு போரை முடிவுக்​குக் கொண்டு வரு​வோம் என்று வெள்ளை மாளி​கை​யில் செய்​தி​யாளர்​களிடம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த வெள்​ளிக்​கிழமை தெரி​வித்​தார். மேலும், ஹமாஸ் பிணைக் கைதி​களை விடுவிக்க 48 மணி நேரம் கெடு​வை​வும் அமெரிக்கா விதித்​துள்​ளது. அது​மட்​டுமல்​லாமல் இஸ்​ரேல், பாலஸ்​தீனம் இடையே போரை நிறுத்த 21 அம்ச அமை​தித் திட்​டத்​தை​யும் அமெரிக்கா தற்​போது அறி​வித்​துள்​ளது.

அமெரிக்கா அறி​வித்​துள்ள 21 அம்​சத் திட்​டத்​தில் இடம்​பெற்​றுள்ள முக்​கிய பிரிவு​கள்:
காசா பகுதி தீவிர​வாதம் இல்​லாத, அமை​தி​யான மண்​டல​மாக மாற்​றப்​படும். காசா மக்​களின் வாழ்க்​கைத் தரத்தை மேம்​படுத்​து​வதே இதன் முக்​கிய நோக்​கம்.

இரு தரப்​பும் இந்​தத் திட்​டத்தை ஒப்​புக்​கொண்​டால், உடனடி​யாக மோதல்​கள் நிறுத்​தப்​படும். இஸ்​ரேல் தனது நடவடிக்​கைகளை நிறுத்​தி, காசா​விலிருந்து படிப்​படி​யாக வெளி​யேறத் தொடங்​கும். பாலஸ்​தீனர்​களை கொண்ட ஒரு குழு​வைக் கொண்டு காசா​வில் இடைக்​கால நிர்​வாகம் அமைக்​கப்​படும். அந்த அமைப்பே காசா​வில் அன்​றாட நிர்​வாகத்​தைக் கவனிக்​கும்.

அமெரிக்​கா​வின் தலை​மை​யில் அரபு மற்​றும் ஐரோப்​பிய நாடு​களைக் கொண்ட ஒரு புதிய சர்​வ​தேச குழு இதைக் கண்​காணிக்​கும். பாலஸ்​தீனிய ஆணை​யம் தனது சீர்​திருத்​தத் திட்​டத்தை முடிக்​கும் வரை காசா​வின் மறுசீரமைப்​புக்கு நிதி திரட்​டு​வது இக்​குழு​வின் பணியாகும்.

இந்​தத் திட்​டத்​துக்கு இஸ்​ரேல் சம்​மதம் தெரி​வித்த 48 மணி நேரத்​துக்​குள், உயிருடன் உள்ள மற்​றும் இறந்த அனைத்​துப் பிணைக் கைதி​களும் இஸ்​ரேல் வசம் ஒப்​படைக்​கப்​படு​வார்​கள். போர் உடனடி​யாக நிறுத்​தப்​படும் என்​பன போன்ற அம்​சங்​கள் இந்தப்பட்டியலில் இடம்​பெற்​றுள்​ளன.

அதே​நேரத்​தில் பாலஸ்​தீனத்தை தனி நாடாக அங்​கீகரிக்க இங்​கிலாந்து உள்​ளிட்ட சில நாடு​கள் முடிவு செய்​துள்​ளன. அதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்​சமின் நேதன்​யாகு ஒப்​புக்​கொள்​ள​வில்​லை. இதை நாங்​கள்​ ஒரு​போதும்​ ஏற்​க​மாட்​டோம்​ என்​று அவர்​ அறிவித்​துள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here