நாகர்கோவிலில் கே.பி ரோடு டிஸ்டிக் கிளப் அருகே சாலையோரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி பாதாள குழி தோண்டப்பட்டுள்ளது. முக்கிய சாலையான இப்பகுதியில் ஏராளமான இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதால் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டால் மாவட்ட ஆட்சியர் அல்லது மாநகராட்சி ஆணையர் யார் பொறுப்பேற்பது என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். உடனடியாக விசாரணை நடத்தி, உரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.














