கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று நாகர்கோவிலில் நடைபெற்ற தவெக பயிற்சிப் பட்டறையில், மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ முத்துக்கிருஷ்ணன் பேசுகையில், தவெகவினர் வாக்குச்சாவடியில் உள்ள வாக்குகளைப் பதிவு செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும், விஜயை முதலமைச்சராக வெற்றி பெறச் செய்ய அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.














