திருவட்டாறு அருகே பிரசித்தி பெற்ற கேசவபுரம் இசக்கியம்மன் பத்ரகாளி பூதத்தான் சாமி கோவிலில் கும்பாபிஷேக விழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. கோவில் தந்திரி நாகராஜன் போற்றி கும்பாபிஷேகத்தை முறையாக நடத்தினார். யாகசாலை பூஜைகள், மூலவர் பிரதிஷ்டை உள்ளிட்ட சடங்குகள் சிறப்பாக நடைபெற்றன. தொடர்ந்து கும்பாபிஷேக நிகழ்ச்சி நிறைவேற்றப்பட்டு, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.














