திருவட்டாறு அருகே அணைக்கரை பகுதியைச் சேர்ந்த 77 வயதான கோமதி, தனியாக வசித்து வந்தார். அவரது பேரன் தினசரி உணவு கொண்டு வந்து கொடுத்து வந்தார். நேற்று உணவு கொடுக்கச் சென்றபோது, மூதாட்டி தீயில் கருகிய நிலையில் சடலமாகக் கிடந்தார். இது குறித்து திருவட்டாறு போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
