கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருகே கோதையாற்றில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு முதலை ஒன்று ஒதுங்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று மீண்டும் அதே பகுதியில் மற்றொரு முதலை தென்பட்டது. அப்பகுதி வழியாக சென்ற சிறுவர்கள் இதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இது தற்போது வைரலாகி அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.














