விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்து 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தெறி’. கலைப்புலி எஸ். தாணு தயாரித்த இப்படம் சிறந்த வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் தணிக்கை பிரச்சினையில் இருப்பதால் ‘தெறி’ படத்தைப் பொங்கலன்று மறு வெளியீடு செய்ய தாணு முடிவு செய்திருந்தார்.
சில பிரச்சினைகள் காரணமாக அப்படத்தின் வெளியீட்டுத் தேதியை ஜன.23-ம் தேதிக்கு மாற்றுவதாக அறிவித்திருந்தார். பின்னர் அதே தேதியில் ‘திரவுபதி 2’, ‘ஹாட் ஸ்பாட் 2’ ஆகிய படங்கள் வெளியானதால், ‘தெறி’ வெளியீட்டுத் தேதியைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதனால், தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இப்படம் பிப்.27-ம் தேதி வெளியாக இருப்பதாக கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்துள்ளார்.














