தக்கலை, புலியூர்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 42 வயதான சுப்பிரமணியன் என்பவர் களியக்காவிளையில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரது செல்ஃபோனும் அணைக்கப்பட்டுள்ளது. இது குறித்து களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.














