தக்கலை: நேற்று (ஏப்ரல் 9) இரவு 10 மணியளவில் தக்கலை அருகே நர்சிங் மாணவி கிளாட்லின் அபினா, தனது தந்தையுடன் திருச்சிக்கு பஸ் ஏற பைக்கில் சென்றபோது, போலீஸ் நிலையம் எதிரில் டாரஸ் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயர சம்பவத்தை அடுத்து, பத்மனாபபுரம் நாம்தமிழர் கட்சி வேட்பாளர் சீலன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட எஸ்பி ஸ்டாலின் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.














