தக்கலை தாலுகா அலுவலகம் எதிரே நேற்று பாரதிய ஜனதா கட்சியினர் வட்டாரத் தலைவர் ஜெகன் ஜோதி தலைமையில் திடீரென குவிந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிராஜா தலைமையிலான போலீசார் உருவ பொம்மையை பறிமுதல் செய்து, போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 2 பெண்கள் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டனர்.














