தக்கலை அருகே புங்கறை பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா நிர்வாகி இந்திரகுமாரின் மனைவி விஜயகுமாரி (43) நேற்று (மார்ச் 29) மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகுமாரி, ஏற்கனவே விஷ மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றதும், தற்போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தக்கலை போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.












