தக்கலை: பார் உரிமையாளரை மிரட்டி பணம் பறிப்பு 2 பேர் கைது

0
62

மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஜான் (50) என்பவர் சாமியார்மடத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் பார் நடத்தி வருகிறார். நேற்று பார் பகுதிக்குச் சென்றபோது, அங்கு நின்றுகொண்டிருந்த சாரோன் பிரபு, ஆல்பர்ட், ஆண்டோ பிரபு மற்றும் சுனில் ஆகிய 4 பேர் ஜாணைத் தடுத்து நிறுத்தி, அவரது சட்டைப் பையில் இருந்த ₹1000 பறித்து, மேலும் மாதம் ₹5000 மாமூல் தர வேண்டும் எனக் கூறிச் சென்றனர். இது குறித்து ஜான் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சாரோன் பிரபு மற்றும் ஆல்பர்ட் ஆகிய இருவரைக் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here