தெருவுக்கடை பகுதியில் தேவாலயங்கள், கோயில், பள்ளி மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவிலும் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என புகார் கூறப்படுகிறது. நிரந்தரமாக இந்த டாஸ்மாக் கடையை மூடும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்த போவதாக இந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த போராட்டத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
