தெருவுகடை பகுதியில் மெயின் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், சர்ச் மற்றும் பள்ளிக்கு அருகில் இருந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக் கோரி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்காததால், கிள்ளியூர் திமுக ஒன்றிய செயலாளர் கோபால் தலைமையில் நேற்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தைத் தொடர்ந்து உடனடியாக கடை அடைக்கப்பட்டது. இரவு 10 மணி வரை கொட்டும் மழையில் போராட்டம் நடத்தியும் அதிகாரிகள் வந்து உறுதிமொழி அளிக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
