கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், மாசி மாத முதல் புதன்கிழமையான இன்று (பிப். 18) சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு எண்ணெய், பால், மஞ்சள் பொடி, களபம், சந்தனம், குங்குமம், பன்னீர், இளநீர் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.














