வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்த அஜித் என்ற கூலித்தொழிலாளியை, சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்த அனித் என்பவர் வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி 470 ரூபாய் பறித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பணம் பறித்த அனித் மீது ஏற்கனவே 5 வழக்குகள் நிலுவையில் உள்ளதும், அவர் ஒரு பிரபல ரவுடி என்பதும் தெரிய வந்துள்ளது. போலீசார் தற்போது அனித்தை தேடி வருகின்றனர்.














