கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியத்தின் ஈசாந்திமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ஞானதாசபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ரவுடிகள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்தி வன்முறையில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக உள்ளூர் போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, அப்பகுதி குடியிருப்புவாசிகள் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் வந்து புகார் மனு அளித்தனர்.
