ராஜாக்கமங்கலம்: புதிய வீடுகள் கட்டி தருமாறு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

0
277

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ராஜாக்கமங்கலம் துறை சுனாமி காலணியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. தற்போது பெய்து வரும் மழையால் சுவர் இடிந்து விழும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது. எனவே புதிய வீடுகள் கட்டித்தரக்கோரி நாகர்கோவிலில் நேற்று (அக்.,15) விவசாய சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here