தேர்தல் நடைபெற இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில், நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ரயில்வே பாதுகாப்பு படையினர் 10 பேர் நாகர்கோவிலில் முகாமிட்டு, பயணிகளின் உடமைகளை சோதனை செய்து வருகின்றனர்.














