குமரி கடற்கரை கிராமங்கள் வழியாக செல்லும் ஏவிஎம் கால்வாய் புதர் மண்டி, தூர்வாரப்படாமல் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பயன்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்கக் கோரி, காமராஜர் மக்கள் இயக்கம் சார்பில் பூத்துறை மீனவ கிராமத்தில் நேற்று மாலை தர்ணா நடைபெற்றது. இயக்க தலைவர் சதீஷ் தலைமை வகித்தார். தமிழ்நாடு வைகுண்டசாமி தர்ம பரிபாலன குமரி கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அபிலாஷ் சிறப்புரையாற்றினார்.














