நித்திரவிளை அருகே பூத்துறை மீனவ கிராமத்தில் ஒரு பாழடைந்த வீட்டில் மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு பைபர் படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் 1600 லிட்டர் மண்ணெண்ணெய் 46 கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் மண்ணெண்ணெயை பறிமுதல் செய்து நாகர்கோவில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.














