புதுக்கடை: மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

0
32

புதுக்கடை பகுதியில் நேற்று மின் ஒயர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாகர்கோவிலைச் சேர்ந்த முத்துராமன் (41) என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். செல்வ மகேஷ் என்பவரது வீட்டில் நடந்த இந்த விபத்தில், முத்துராமன் படுகாயமடைந்து குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here