இனயம் புத்தன்துறை பகுதியைச் சேர்ந்த சதாம் மாலிக் மீது புதுக்கடை காவல் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் இதுவரை நீதிமன்ற விசாரணையில் ஆஜராகவில்லை. இந்நிலையில், அவரை 10.03.2026 அன்று குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த குழித்துறை கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிபதி புதுக்கடை காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.














