அமலாக்கத் துறையில் ஆஜரானார் பினராயி மகள் வீணா

0
17

அமலாக்​கத் துறை அனுப்​பிய புதிய சம்​மனை தொடர்ந்து கேரள முன்​னாள் முதல்​வர் பின​ராயி விஜயனின் மகள் வீணா நேற்று காலை விசா​ரணைக்கு ஆஜரா​னார்.

கேரள முன்​னாள் முதல்​வர் பின​ராயி விஜயனின் மகள் வீணா விஜயன். இவர் எக்​சாலாஜிக் சொல்​யூஷன்ஸ் என்ற ஐ.டி. நிறுவனத்தை நடத்தி வந்​தார். இந்த நிறு​வனத்​துக்கு கொச்சின் தாது மணல் ஆலை நிறு​வனம் (சிஎம்​ஆர்​எல்) எந்​தவொரு சேவையும் பெறாமல் ரூ.2.78 கோடி செலுத்​தி​ய​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இது தொடர்​பாக அமலாக்​கத் துறை விசா​ரித்து வருகிறது.

இந்த வழக்​கில் ஜூன் 12-ம் தேதி விசா​ரணைக்கு ஆஜராகு​மாறு வீணாவுக்கு அமலாக்​கத் துறை சம்​மன் அனுப்​பி​யிருந்​தது. ஆனால் உடல்​நிலையை காரணம் காட்டி, விசா​ரணை தேதியை தள்ளி வைக்க வேண்​டும் என வீணா கோரி​யிருந்​தார். இதையடுத்து ஜூன் 17-ம் தேதி ஆஜராகு​மாறு அமலாக்​கத் துறை புதிய சம்​மன் அனுப்​பியது.

இதை ஏற்​றுக்​கொண்டு கொச்​சி​யில் உள்ள அமலாக்​கத் துறை அலு​வல​கத்​தில் வீணா விஜயன் நேற்று காலை 10.30 மணிக்கு ஆஜரா​னார். அப்போது செயல்​ப​டா​மல் இருக்​கும் அவரது ஐ.டி. நிறு​வனம் தொடர்​பான பரிவர்த்​தனை​கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

முன்னதாக, இந்த வழக்கு தொடர்​பாக சிஎம்​ஆர்​எல் நிறு​வனர் சசிதரன் கர்த்​தா​வின் மனைவி மற்​றும் மகனிடம் அமலாக்​கத் துறை கடந்த செவ்​வாய்க்​கிழமை விசா​ரணை நடத்​தி​யது. இதற்கு முன்​ன​தாக, சசிதரன் கர்த்​தா​வின் மகளிட​மும் இந்த விவ​காரம் குறித்து திங்​கட்​கிழமை விசா​ரணை நடத்​தப்​பட்​டது.

சசிதரன் கர்த்​தா​வால் நடத்​தப்​படும் ‘எம்​பவர் இந்​தியா கேபிடல் இன்​வெஸ்ட்​மென்ட்ஸ் என்ற மற்​றொரு நிறு​வனம், எக்​சாலாஜிக் நிறு​வனம் உரிய நேரத்​தில் கடனைத் திருப்​பிச் செலுத்​தத் தவறிய நிலை​யிலும், அந்​நிறு​வனத்​துக்கு ரூ.50 லட்​சம் கடன் வழங்கியிருப்ப​தாக அமலாக்​கத் துறை தெரிவிக்​கிறது. இந்த பரிவர்த்​தனை​கள் மூலம் வீணா​வும், சிஎம்​ஆர்​எல் நிர்​வாக​மும் ‘‘குற்​றத்​தின் மூலம் ஈட்​டிய வரு​வாயை’’ உரு​வாக்​கி​யுள்​ள​தாக அமலாக்​கத்​துறை குற்​றம் சாட்​டி​யுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here