Home மாநில செய்திகள் அனிதாவின் நினைவேந்தல் நிகழ்வுக்கான அனுமதி – உதயநிதி கேள்வியும், ஆதவ் அர்ஜுனா பதிலும்

அனிதாவின் நினைவேந்தல் நிகழ்வுக்கான அனுமதி – உதயநிதி கேள்வியும், ஆதவ் அர்ஜுனா பதிலும்

0

நீட் தேர்​வுக்கு போராடிய அனி​தா​வின் நினை​வேந்​தல் நிகழ்ச்​சிக்கு அனு​மதி வழங்​காதது ஏன் என்று சட்​டப்​பேர​வை​யில் எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் கேள்​வியெழுப்​பி​னார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் நேற்று கேள்​விநேரம் முடிந்​த​ பின்​னர் அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா, பேசும்​போது, ‘‘அரியலூரைச் சேர்ந்த மாணவி அனி​தா, பிளஸ் 2 பொதுத்​தேர்​வில் மருத்​து​வக் கல்விக்​கான கட்​ஆப் மதிப்​பெண் 196.75 பெற்​றும், நீட் தேர்வு முறை பாதிப்​பால் அவருடைய மருத்​து​வக் கனவு தகர்ந்​தது. நீட் தேர்​வுக்கு எதி​ராக தனக்​கான நீதி​யைப் பெற உச்ச நீதி​மன்​றம் வரை சென்று அனிதா போராடி​னார்.

ஆனால், சாதக​மான தீர்வு கிடைக்​காத​தால் அவர் உயிரை மாய்த்​துக்​கொண்​டது தமிழகத்​தையே அதிர்ச்​சிக்​குள்​ளாக்​கியது. இதையடுத்து பல்​வேறு அரசுகளின் காலக்​கட்​டங்​களி​லும் சட்​டப்​பேர​வை​யில் நீட் தேர்​வுக்கு எதி​ராக தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளன.

எனினும், தமிழகத்​தின் கோரிக்​கைக்கு உரிய முக்​கி​யத்​து​வம் அளிக்​காமல் தொடர்ந்து மத்​திய அரசு புறக்​கணித்து வரு​கிறது. 2029-ல் தேர்​தல் சூழல்​கள் மாறும்​போது, நாடாளு​மன்​றத்​தில் நீட் தேர்வு முழு​வது​மாக ரத்து செய்​யப்​படும். அனி​தா​வின் தியாகம் வீண்​போ​காது. அவருக்​கான நீதி நிச்​ச​யம் வென்​றெடுக்​கப்​படும்” என்​றார்.

அதைத் தொடர்ந்து நடை​பெற்ற விவாதம்:

எதிர்க்​கட்சி தலை​வர் உதயநிதி ஸ்டா​லின்: இன்று (செப்​டம்​பர் 1) அனி​தா​வின் 9-ம் ஆண்டு நினைவு நாள். இதையொட்டி தமிழ்​நாடு மாணவர் இளைஞர் கூட்​டமைப்பு மற்​றும் அனி​தா​வின் குடும்​பத்​தினர் சார்​பில் நினை​வேந்​தல் நிகழ்ச்​சியை சென்னை பெசன்ட் நகர் கடற்​கரை​யில் இன்று நடத்​து​வதற்கு திட்​ட​மிடப்​பட்​டிருந்​தது.

ஆனால், இந்த கூட்​டத்​துக்கு சென்னை மாநகர காவல்​துறை அனு​மதி மறுத்​துள்​ளது. ஜனநாயக முறை​யில் அமை​தி​யாக நடக்​க​விருந்த ஒரு நினை​வேந்​தல் நிகழ்ச்​சிக்கு இந்த அரசு ஏன் அனு​மதி கொடுக்​க​வில்​லை? நீட் எதிர்ப்​பின் அடை​யாள​மான அனிதா நினை​வேந்​தலுக்கு அனு​மதி தரவேண்​டும்.

அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா: பெசன்ட் நகர் அன்னை வேளாங்​கண்ணி மாதா ஆலய திரு​விழா கொடியேற்​றம் மற்​றும் தேர்த்​திரு​விழா நாட்​களில் மக்​கள் கூட்​டம் அதி​க​மாக இருக்​கும் என்​ப​தால் நினை​வேந்​தல் நிகழ்ச்​சிக்கு அனு​மதி மறுக்​கப்​பட்​டுள்​ளது. மாற்று இடம் கோரி​னால் நிச்​ச​யம் பரிசீலனை செய்​யப்​படும். இதில் எவ்​வித அரசி​யலும் இல்​லை.

உதயநி​தி: இந்த விவ​காரத்தை வைத்து அரசி​யல் செய்ய வேண்​டிய அவசி​யம் எங்​களுக்​கும் இல்​லை. கொடியேற்ற நிகழ்வு கடந்த வாரமே முடிந்​து​விட்​டது. அடுத்​தகட்​ட​மாக செப்​டம்​பர் 7, 8-ம் தேதி​களில்​தான் தேர்த்​திரு​விழா நடை​பெறவுள்​ளது.

நேற்று (ஆகஸ்ட் 31) மாலைகூட நிகழ்ச்சி ஏற்​பாட்​டாளர்​கள் விழா நடை​பெறும் இடத்தை நேரில் பார்​வை​யிட்​டனர். அங்கு பெரியள​வில் கூட்​டம் இல்​லாத சூழலே நில​வு​கிறது. எனவே, நினைவு நாளான இன்று இந்​நிகழ்வை நடத்த அரசு அனு​மதி தரவேண்​டும். இல்​லை​யெனில் அரசே உடனடி​யாக மாற்று இடத்தை தேர்​வுசெய்து வழங்க வேண்​டும்.

அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா: முதல்​வருடன் கலந்து பேசி மாற்று இடம் வழங்​கப்​படும். இவ்​வாறு விவாதம் நடை​பெற்​றது. முன்​ன​தாக மஜக கட்​சித் தலை​வரும், எம்​எல்​ஏவு​மான தமி​முன் அன்​சாரி ‘பேன் நீட்’ (BAN NEET) என்ற வாசகம் பொறித்த கறுப்பு நிற டிஷர்ட் அணிந்து பேர​வைக்கு வருகை வந்​தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version