கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று 35 அடியாக இருந்த நிலையில், தற்போது வினாடிக்கு 2046 கன அடி தண்ணீர் வருவதால், அணை தீவிர கண்காணிப்பில் உள்ளது.
