கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய கட்டிடப் பணிகள் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளன. பழைய கட்டிடம் இடிந்து புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்ட நிலையில், மக்கள் அழுத்தம் கொடுக்கும்போது மட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளதால், தொலைவில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல நோயாளிகள் சிரமப்படுகின்றனர். மருத்துவமனை கட்டிடப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.














