பாகிஸ்தானின் கராச்சி தீ விபத்து: உடல்களை அடையாளம் காண 50 பேரிடம் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு

0
47

பாகிஸ்​தானின் கராச்சி நகரில் உள்ள ‘குல் ஷாப்​பிங் பிளா​சா’ என்ற வணிக வளாகத்​தில் கடந்த வாரம் சனிக்​கிழமை தீ விபத்து ஏற்​பட்​டது. 36 மணி நேர போராட்​டத்​துக்​குப் பின், தீயணைப்பு படை​யினர் தீயை முற்​றி​லும் அணைத்​தனர்.

அங்கு உடல்​களை சேகரிக்​கும் பணி​கள் நடந்து வந்​தன. இதுவரை மொத்​தம் 61 பேரின் உடல்​கள் மீட்​கப்​பட்​டன. இவற்​றில் 11 பேரின் உடல்​களை மட்​டுமே அடை​யாளம் காண முடிந்​தது.

50 உடல்​களை அடை​யாளம் காண முடியாத அளவுக்கு கரு​கி இருந்தன. அவர்களை அடையாளம் காண, காணா​மல் போனவர்​களின் குடும்ப உறுப்​பினர்​கள் 50 பேரிடம் டிஎன்ஏ மாதிரி​களை பாகிஸ்தான் அதிகாரிகள் சேகரித்​துள்​ளனர்.

இதற்கிடையில், இந்த தீ விபத்து குறித்து நீதி விசாரணைக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ள​து. மின் கசிவு காரண​மாக இந்த தீ விபத்து ஏற்​பட்​டிருக்​கலாம் என ஆரம்ப கட்​டத் தகவல்​கள் தெரிவிக்​கின்​றன. இங்கு மீட்புப் பணி​கள் முற்​றி​லும் முடிவடைய இன்​னும் 10 முதல் 15 நாட்கள் ஆகும் என கராச்சி தீயணைப்​பு அதி​காரி தெரிவித்துள்ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here