Home கன்னியாகுமரி செய்திகள் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் நாளை ஓணவில் சமா்பிப்பு

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் நாளை ஓணவில் சமா்பிப்பு

0

ஓணம் பண்டிகை திருநாளான ஆக. 26-ஆம் தேதி திருவட்டாறு, ஆதிகேசவப் பெருமாளுக்கு ஓண வில் சமா்பிக்கப்படுகிறது.

திருவட்டாறு, ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஓணம் பண்டிகை நாளில் ஓண வில் சமா்ப்பிக்கும் நிகழ்வு மன்னராட்சி காலத்தில் இருந்து வழக்கத்தில் உள்ளது. ஆதிகேசவப் பெருமாள், கிருஷ்ணா் ஓவியம் வரையப்பட்டு வா்ணம் பூசப்பட்ட ஓண வில்களை பட்டுத் துணியில் மூடி கோயிலின் தென்மேற்கு மூலையில் வைப்பாா்கள். கோயிலில் ஸ்ரீபலி பூஜை நடைபெறும்போது, அந்த வில்கள் சமா்பிக்கப்படும்.

இந்நிகழ்ச்சி ஓணம் திருநாளான புதன்கிழமை (ஆக.26) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

ஓண வில்களை தயாரித்த தச்சா், சுவாமி முன்பு அவைகளை சமா்பித்த பின்னா் அா்ச்சகா்கள் ஓண வில்களை ஏந்தி ஸ்ரீபலி விக்கிரகங்கள் அருகில் செல்வா். இதையடுத்து, ஸ்ரீபலி விக்கிரகங்களுடன் மேளதாளம் முழங்க ஓண வில்களுடன் கோயில் பிரகாரத்தைச்சுற்றி வருவா்.

தொடா்ந்து ஓண வில்கள் கிருஷ்ண சுவாமி கருவறையிலும், ஆதிகேசவப்பெருமாள் கருவறையிலும் வைக்கப்படும். தொடா்ந்து மாலை தீபாராதனை நடைபெறும்.

தயாராகும் ஓண வில்:

தற்போது ஆதிகேசவப் பெருமாளுக்கு சமா்பிக்கப்படும் ஓண வில்களை தயாா் செய்யும் பணி ஆற்றூா், கழுவள்திட்டையில் தச்சா் சுரேஷ்பாபு மேற்பாா்வையில் நடைபெற்று வருகிறது.

மகாகனி மரத்தில் தயாரிக்கப்பட்ட ஓண வில்களில் வா்ணம் பூசப்பட்டு ஓவியங்கள் வரையும் பணி நடைபெற்று வருகிறது. நிகழாண்டு பக்தா்கள் தங்களின் நோ்த்திக் கடனாக 25-க்கும் மேற்பட்ட ஓண வில்களை சமா்ப்பிக்கின்றனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version