Home கன்னியாகுமரி செய்திகள் பாறைகளை உடைத்து கடத்த முயற்சி

பாறைகளை உடைத்து கடத்த முயற்சி

0

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை பகுதியில் அனுமதியின்றி பாறைகளை உடைத்துக் கடத்த முயன்ற மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக் தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, முன்சிறையில் அரசு அனுமதியின்றி கம்பிரஸா் வாகனம் மூலம் ஓட்டுநா் உள்பட 3 போ் பாறைகளை உடைத்து கடத்த முயற்சி செய்துகொண்டிருந்தனராம்.

போலீஸாரை கண்டதும் அவா்கள் மூவரும் தப்பிச் சென்றனராம். இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version